உனை நினைத்து கலங்கிய...

உனை நினைத்து கலங்கிய... 

என்னவனே ...
பிரிவு துயரை தந்து ....
நெடும் தூரம் சென்றவனே ...
உனை நினைத்து கலங்கிய... 
கண்கள் அழகிழந்து 
விட்டதடா ...!!! 

உன் அழகை பார்த்து ...
அணுவாய் ரசித்த கண்களை ..
என் மனம் என்னும் மலர் ...
வெட்கப்பட்டான - இப்போ 
அழகிழந்து இருக்கும் கண்கள் ..
மனமலரை பார்த்து ....
வெட்கப்படுகின்றன .....!!!

குறள் 1231
+
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி 
நறுமலர் நாணின கண்.

+
உறுப்புநலனழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 151

கருத்துகள்